குடிமையியல் பணி தேர்வுக்கான ஏற்பாடு குறித்து ஆட்சியர் ஆலோசனை!

குடிமையியல் பணி தேர்வுக்கான ஏற்பாடு குறித்து ஆட்சியர் ஆலோசனை!

குடிமையியல் பணி தேர்வு

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள குடிமையியல் பணி முதல் நிலை தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் மத்திய குடிமையியல் பணிகளுக்கான முதல் நிலை தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய குடிமையியல் பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் உமேஷ் குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்தையன் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர்வு மையங்களில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story