ரேஷன் கடையில் மே மாதத்திற்கான பொருட்கள் பெறலாம் - ஆட்சியர் அறிவிப்பு

ரேஷன் கடையில் மே மாதத்திற்கான பொருட்கள் பெறலாம் - ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பை இந்த மாதம் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்திற்கான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு பல ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ரேஷன் கார்டுதாரர்கள் பாதிக்கப்பட்டனர். தங்களுக்கு மே மாதத்திற்கான பாமாயில், துவரம்பருப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் மே மாதம் பாமாயில் துவரம் பருப்பு பெறாத ரேஷன் கார்டுதாரர்களுக்கு மே மாதத்திற்கான ஒதுக்கீட்டை இந்த மாதம் (ஜீன்) பெற்றுக்கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story