அஞ்சல் வாக்கு சீட்டு அச்சிடும் பணி குறித்து ஆட்சியர் ஆய்வு

அஞ்சல் வாக்கு சீட்டு அச்சிடும் பணி குறித்து ஆட்சியர் ஆய்வு

 ஆட்சியர் பழனி ஆய்வு 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு தபால் வாக்கு சீட்டுகள் அச்சிடும் பணியை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில், விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான அஞ்சல் வாக்குச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story