100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை

100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகம்  முற்றுகை

மனு அளிக்க வந்த கிராம மக்கள் 

சேலம் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்களிடம் 5 பேர் மட்டுமே உள்ளே சென்று மனு கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள், எங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்பதால் அனைவரும் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர். இதுதொடர்பாக போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, 'சாமிநாயக்கன்பட்டி பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறோம். இங்கு ஒரு தரப்பை சேர்ந்தவர்களை பணி காலம் முடிந்து விட்டது என கூறி உடனே மாற்றுகின்றனர். இதனால் வேலையிழந்து தவித்து வருகிறோம். எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி எங்களுக்கு தினமும் வேலை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

Tags

Next Story