திருப்பூரில் பெண் மீது கல்லூரி பேருந்து மோதி பலி

திருப்பூரில் பெண் மீது கல்லூரி பேருந்து மோதி பலி

உயிரிழந்த பெண்

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையை கடந்து சென்ற பெண் மீது கல்லூரி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

திருப்பூர் இடுவாய் பகுதியைச் சேர்ந்தவர். செல்வி இவர் திருப்பூர் மாநகராட்சி 44 வது வார்டில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செல்வி வேலையை முடித்துவிட்டு இடுவாய் செல்வதற்காக பழைய பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க முயன்ற பொழுது கல்லூரி மாணவிகளை அழைத்து வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதி துப்புரவு பணியாளர் செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் தெற்கு காவல் துறையினர் விபத்தில் பலியான செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் விபத்து குறித்து தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story