"கல்லூரி கனவு" உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - ஆட்சியர் தகவல்

கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - ஆட்சியர் தகவல்

ஆட்சியர் தர்ப்பகராஜ்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் வரும் 11ஆம் தேதி கல்லூரி கனவு நிகழ்ச்சியின் வாயிலாக உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக முதல்வரின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருகின்ற 11ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி அளவில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் வகையில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வளாகத்தில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் உயர்கல்வி மேற்படிப்பு என்னென்ன படிப்புகள் படிக்கலாம் என்பது குறித்து விளக்கப்பட உள்ளது மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏதுவாக மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக வாகன வசதி மற்றும் அவர்களுக்கான உணவு குடிநீர் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சியில் பல்வேறு துறைச் சார்ந்த வல்லமைகள் கலந்து கொண்டு உயர் படிப்புகள் பற்றி மாணவர்களை எடுத்து உரைக்க உள்ளனர் எனவும் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story