"கல்லூரிக் கனவு" உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி - ஆட்சியர் அழைப்பு

கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி - ஆட்சியர்  அழைப்பு

ஆட்சியர் கற்பகம் 

12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்ளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடக்கும் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் கலந்துகொள்ள ஆட்சியர் கற்பகம் அழைப்பு விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ள தகவலில், பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ்”கல்லூரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மே- 9ம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.30 மணி வரை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு துறைகளில் உயர் கல்வி படிப்பு சேர்க்கை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் குறித்த வழிகாட்டுதல் அரங்குகள் இடம்பெறுகின்றன. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள் தொழில் பயிற்சி நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டு தங்களது கல்லூரிகளில் மாணவ மாணவியர்கள் மேற்படிப்பை, விருப்பமுள்ள பாடங்களை தேர்ந்தெடுத்து பயில்வதற்கான வழிகாட்டல் அரங்குகள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளன. எனவே அனைத்து மாணவ மாணவிகளும் இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல் முறையாகப் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story