கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - ஆட்சியர் அழைப்பு

கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி - ஆட்சியர் அழைப்பு

ஆட்சியர் லட்சுமிபதி 

தூத்துக்குடியில் வரும் 11ம் தேதி நடக்கும் ‘கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி வாழ்த்துகளை தெரிவித்ததுடன் வரும் 11.05.2024ம் தேதி நடைபெறவுள்ள ‘கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்குபெற அழைப்பும் விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி., வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளான 203 பள்ளிகளிலிருந்து 8155 மாணவர்களும், 10423 மாணவியர்களும் தேர்வு எழுதிய நிலையில், 7681 (94.19%) மாணவர்களும், 10227 (98.12%) மாணவியர்களும் மொத்தம் 17,908 (96.39%) மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story