உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி

உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி

பைல் படம் 

திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் "நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி வரும் 9ம் தேதி நடக்கிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் முன்னிலையில் திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 09.05.2024 அன்று காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெறவுள்ளது.எனவே அனைத்து மாணவ, மாணவிகளும் இந்த “கல்லூரி கனவு“ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என புதன்கிழமை காலை 9.30 மணியளவில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story