தக்கலை அருகே கல்லூரி காவலாளி தற்கொலை

தக்கலை அருகே கல்லூரி காவலாளி தற்கொலை

தற்கொலை 

தக்கலை அருகே கல்லூரி காவலாளி விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்துகொண்டார்.
தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ண பிள்ளை (வயது 55). இவர் குமாரகோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த 4 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தென்னை மரத்திற்கு வைக்கக்கூடிய விஷ மாத்திரைகளை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை அவரது மனைவி செல்லம்மாள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.பின்பு மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி யில் ராமகிருஷ்ண பிள்ளை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். உடல்நலம் பாதித்து அவதிப்பட்டதால் வாழ்வில் வெறுப்படைந்து அவர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story