கல்லூரி மாணவி மாயம் - பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்.

கல்லூரி மாணவி மாயம் - பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்.

காவல் நிலையம்  

திருவட்டார் அருகே கல்லூரிக்குச் சென்ற மாணவி மாயமானதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் .போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவட்டார் அருகே மேக்காமண்டபம் விராலிக்காட்டுவிளையை சேர்ந்தவர் ரவி.டெம்போ டிரைவர். அவரது மனைவி இந்திரா.இந்த தம்பதிக்கு ஆஷிகா என்ற மகள் உள்ளார். ஆஷிகா அழகியமண்டபம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்இ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு காலை 10 மணியளவில் ஆஷிகா வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் மாலையில் நீண்ட நேரமாகியும் ஆஷிகா வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், அவரை பல இடங்களில் தேடினர்.உறவினர்கள், நண்பர்களிடமும் விசாரித்தனர். ஆனாலும் மாணவி பற்றி எந்த தகவலும் தெரிய வில்லை. இதையடுத்து திருவட்டார் காவல் நிலை யத்தில் இந்திரா புகார் அளித்தார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவி திடீரென எங்கு சென்றார் அவருக்கு என்ன ஆனது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story