பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

விபத்து 

தூத்துக்குடியில் பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் மகன் அபிஷேக் கோபிநாத் (19). இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று தனது நண்பரான போல்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரகாஷ் (19) என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

திருச்செந்தூர் மெயின் ரோடு மேம்பாலத்தில் சென்றபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே அபிஷேக் கோபிநாத் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story