கல்லூரி மாணவி பலி: அரைகுறை பாலத்தால் விபரீதம்!

கல்லூரி மாணவி பலி: அரைகுறை பாலத்தால் விபரீதம்!

விபத்தில் பலியானவர்

புதுக்கோட்டை மாவட்டம்,அசரப்பட்டி அருகே சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்த மாணவி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை அடப்பன்வயல் ஜே.ஜே. நகர் சேர்ந்தவர் காதர் மொய்தீன். இவருடைய மகள் ஆயிஷா சிபானா (18). இவர் புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. பேஷன் டெக்னாலஜி படித்து வந்தார். இந்தநிலையில் காதர் மொய்தீன் தனது மகள்களான ஆயிஷா ஷபானா, பினோசியா பேகம் ஆகியோருடன் நேற்று ஆலங்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றபோது அரசடிப்பட்டி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மூன்று நபர்களும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆயிஷா சிபானா சிகிச்சை பலனின்றி பலியானார்.மற்ற இரு நபர்களும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story