சாப்பிடும் போது கல்லூரி மாணவி உயிரிழப்பு

சாப்பிடும் போது கல்லூரி மாணவி உயிரிழப்பு
பைல் படம்
வீட்டில் உணவு சாப்பிடும் போது கல்லூரி மாணவி உயிரிழப்பு .

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள முழங்குழி பகுதியை சேர்ந்த சென்னிதோட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மூத்த மகள் நிவிதா (18 ) ; கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு உடலில் அம்மை ஏற்பட்டு ஊருக்கு வந்துள்ளார். தற்போது அம்மை சரியாகி அவர் கல்லூரிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

நேற்று இரவு வீட்டில் குடும்பத்தாருடன் உணவு உண்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு இரண்டு முறை விக்கல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறே அவர் சாய்ந்து உள்ளார். உடனே அவரது தந்தை மற்றும் உறவினர்கள் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story