குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

குளத்தில் மூழ்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம் , கொங்குடி பாலம் அருகே குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொங்குடி பாலம் அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சத்தியமங்கலம் சுதர்சன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவன் அபூபக்கர் நீரில் மூழ்கினார்.பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீசார் அபூபக்கரின் உடலை மீட்டு உடலுக்கு கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து,காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story