பெருமாநல்லூரில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

பெருமாநல்லூரில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை

காவல் நிலையம்

பெருமாநல்லூரில் பூனைகளை வீட்டுக்கு எடுத்து வந்து பராமரித்ததை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பூர் பெருமாநல்லூரில் பூனைகளை வீட்டுக்கு எடுத்து வந்து பராமரித்ததை தாயார் கண்டித்துதால் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை! திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரை சேர்ந்தவர் பேப்டிஸ்ட்டா கார்மல் தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவருடைய மகன் ஆரோன் ரியான் (வயது 21).இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.இந்த நிலையில் வீதியில் திரியும் பூனைகளை வீட்டுக்கு எடுத்து வந்து உணவு கொடுத்ததாகவும் இதை அவரது தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமடைந்த மாணவர் நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தாயாரின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story