அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

அரசு பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

காவல் நிலையம் 

திருக்கோவிலுார் அடுத்த பழங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தணிகாசலம் மகன் ஆகாஷ், 19; திருவண்ணாமலை உள்ள தனியார் கல்லுாரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை 7:30 மணிக்கு தனது பைக்கில் கல்லுாரி செல்வதற்காக திருக்கோவிலுார் நோக்கி சென்று கொண்டிருந்தார். பழங்கூர் அருகே சென்றபோது, அரசு டவுன் பஸ் பைக் மீது மோதியது. இதில் ஆகாஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து அவரது தந்தை தனிகாசலம் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story