ரயில் மோதி கல்லூரி மாணவி பலி - கோவில்பட்டியில் சோகம்

ரயில் மோதி கல்லூரி மாணவி பலி - கோவில்பட்டியில் சோகம்

பைல் படம் 

கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம, கயத்தார் சிதம்பரனார் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் மகள் கவிதா (20). இவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை, கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள ரெயில்வே சுரங்க பாலம் அருகே ரெயில்வே தண்டவாளத்தினை கடக்க முயன்றபோது, அவர் ரயில் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து ரயில்வே போலீசார் மாணவியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story