கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

கல்லூரி மாணவி மாயம் போலீசார் விசாரணை

கல்லூரி மாணவி மாயம் 

குமாரபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி மாயமானார்.

நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையம் அய்யன்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், 45, கூலி. இவரது 20 வயது மகள், திருச்செங்கோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் காலை 10:00 மணியளவில் கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் மகேந்திரன் புகார் செய்ததின் பேரில், போலீசார் காணாமல் போன கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags

Next Story