சேலத்தில் கல்லூரி மாணவி மாயம்

சேலத்தில் கல்லூரி மாணவி மாயம்

பைல் படம் 

சேலம் கன்னங்குறிச்சியில் கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரையும், அவரை அழைத்து சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.
சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (48). இவரது மகள் காவியா (18). சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம்., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கன்னங்குறிச்சி இந்திராநகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வருவதை காவியா வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று முன்தினம் காலை, தட்டச்சு வகுப்பிற்கு செல்வதாக கூறிவிட்டு காவியா வெளியே சென்றுள்ளார்.பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வர வில்லை. உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடி பார்த்தும் காணவில்லை. இதுபற்றி சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசில் ராஜேந்திரன் புகார் கொடுத்தார். போலீஸ் எஸ்ஐ மோகனாம்பாள் வழக்குப்பதிவு செய்து மாயமான காவியா குறித்து விசாரணை நடத்தினார். அதில் மாணவியை கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த வாலிபர் அழைத்துச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதனால், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story