தூத்துக்குடியில் கல்லூரி மாணவி திடீர் மாயம்

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி திடீர் மாயம்

பைல் படம் 

தூத்துக்குடியில் கல்லூரி மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
தூத்துக்குடி தெர்மல் நகர் கேம்ப் 1 முத்து நகரைச் சேர்ந்தவர் பாபு. இவருடைய மகள் வினோதினி (19) தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வீட்டை விட்டுவிட்டு வெளியே சென்றவர் பின்பு வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லையாம். இதுகுறித்து அவரது தந்தை தெர்மல் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story