கீரிப்பாறையில் கல்லூரி மாணவி மாயம் 

கீரிப்பாறையில் கல்லூரி மாணவி மாயம் 
பைல் படம்
கீரிப்பாறை அருகே கல்லூரி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள வாழையத்து வயல் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவரது மகள் நிஷாந்தினி (19). நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி ஏ 3 -ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவ தினம் சதீஷ்குமாரும் அவரது மனைவியும் சேர்ந்து ரப்பர் பால் வெட்டும் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் நிஷாந்தினி மட்டும் தனியாக இருந்தார்.

இதற்கிடையே வேலை முடிந்து இரண்டு பேரும் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த மகளை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததும், உறவினர் வீடுகளில் தேடியும் மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சதீஷ்குமார் கீரிப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story