கல்லூரி மாணவன் மாயம் : காவல்துறையினர் விசாரணை

கல்லூரி மாணவன் மாயம் : காவல்துறையினர் விசாரணை
பைல் படம்
நல்லம்பள்ளியை அடுத்த அதியமான் கோட்டை எம்ஜிஆர் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவன் மாயமானதால் காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி அடுத்த அதியமான் கோட்டை எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் கல்லூரி மாணவன் கார்த்திக் இவர் தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் இந்த நிலையில் கடந்த 16 அன்று முதல் கார்த்திக்கை காணவில்லை பல இடங்களில் உறவினர் ஊர்களில் தேடியும் நண்பர்களிடம் ஊர்களில் தேடி வந்தனர் கிடைக்கவில்லை.

இது குறித்து கார்த்திக்கின் பெற்றோர் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் படி அதியமான் கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story