சேலத்தில் கல்லூரி மாணவி தற்கொலை - குடும்பத்தினர் அதிர்ச்சி

சேலத்தில் கல்லூரி மாணவி தற்கொலை - குடும்பத்தினர் அதிர்ச்சி

தற்கொலை

சேலத்தில் கல்லூரி மாணவி தற்கொலை உடலை மீட்டு போலீசார் விசாரணை
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் பிரவீனா (வயது 19). நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியார் கல்லூரியில் பயோடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலையில் அவரது அறையில் வீட்டில் துப்பட்டாவால் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைக்கண்டு அடைந்த குடும்பத்தினர் பிரவீனா உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பிரவீனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags

Next Story