கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்!

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்!

கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு 

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி ஆணையாளர் ஏ.சரவணன் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்ட அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 100 சதவீத வாக்குப்பதிவு சம்பந்தமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Next Story