திருச்சி அருகே ஜேசிபி பைக் மீது மோதல்: கல்லூரி மாணவி படுகாயம்

திருச்சி அருகே ஜேசிபி பைக் மீது மோதல்:  கல்லூரி மாணவி படுகாயம்

விபத்தை ஏற்படுத்திய ஜேசிபி வாகனம்

திருச்சி அருகே ஜேசிபி பைக் மீது மோதியதில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி ( 22) என்பவர் காவேரி கலைக் கல்லூரியில் நுண்கலை பட்டப் படிப்பு பயின்று வருகின்றார். இவர் நேற்று மதியம் 1.15 மணியளவில் திருச்சி - கரூர் மெயின் ரோடு, கம்பரசம்பேட்டை பெரியார் நகர் அருகில் தன்னுடைய Honda Dio scooty வாகனத்தை ஓட்டி வந்தார் .

அப்போது தனிநபர் இடத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஜே.சி.பி. இயந்திரத்தை ஓட்டுநர் ஐயப்பன் இயக்கி கொண்டு இருந்துள்ளார் . அப்போது கவனக்குறைவாக வண்டியை பின்னோக்கி எடுக்கும் போது மாணவி ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது பலமாக மோதியதில் மாணவி மகேஸ்வரிக்கு படுகாயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜீயபுரம் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Tags

Next Story