சாலையோர தடுப்பில் மோதி விபத்து

சாலையோர தடுப்பில் மோதி விபத்து

விபத்தில் சிக்கிய பேருந்து

சாலையோர தடுப்பில் மோதி விபத்துககுள்ளனது.

நத்தம் மதுகாரம்பட்டியில் சாலையோர தடுப்பில் மோதிய அரசு பஸ் விபத்துக்குள்ளானது. மாற்று பஸ் இல்லாததால் தேர்வுக்கு சென்ற பள்ளி சிறுவர்கள் நடந்தே பள்ளிக்கு சென்றனர். நத்தத்தில் இருந்து ராஜகோபாலபுரம் வழியாக மதுக்காரம்பட்டிக்கு அரசு பஸ் சென்று நத்தம் நோக்கி வந்தது.

ராஜகோபாலபுரம் பகுதி வளைவில் பஸ்சை திருப்ப முயன்ற போது சாலை ஓரம் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் பின்பக்கம் சேதமடைந்தது.

யாருக்கும் காயமில்லை. பஸ்சில் பயணம் செய்த 30க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருவதால் மாற்று பஸ்சுக்காக காத்திருந்தனர். எந்த பஸ்சும் வராததால் 5 கி.மீ.,க்கு மேல் நடந்தே பள்ளிக்குச் சென்றனர்.

Tags

Next Story