தம்பிக்கோட்டையில் தோழர் மலேயா கணபதி நினைவு தினம் 

தம்பிக்கோட்டையில் தோழர் மலேயா கணபதி நினைவு தினம் 

நினைவு தினம் அனுசரிப்பு

தம்பிக்கோட்டையில் தோழர் மலேயா கணபதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மலேயா தொழிலாளர்கள், தமிழர்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு, பிரிட்டிஷ் அரசால் தூக்கிட்டு கொல்லப்பட்ட தோழர் மலேயா கணபதியின் 75வது நினைவு நாளையொட்டி,

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை முக்கூட்டு சாலை, மலேயா கணபதி நினைவு ஸ்தூபியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நி

கழ்ச்சிக்கு, பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றியத் தலைவர் மகாலிங்கம், மூத்த தோழர் மெரினா ஆறுமுகம், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story