சேலம் : மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினவு தினம்.

சேலம் : மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினவு தினம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்

மேட்டூரில் மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 7-ம் ஆண்டு நினைவு.
சேலம் மாவட்டம்,மேட்டூர் அருகே மேச்சேரியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர், புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. பேரூர் கழக செயலாளர் ஜெ. குமார் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியானது பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பேருந்து நிலையம் வந்தடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் லலிதா சரவணன் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் கலையரசன் , வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் சித்தன் மாநில எம்.ஜி.ஆர், மன்ற இணை செயலாளர் எமரால்டு வெங்கடாசலம், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ,மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வம் அம்மா பேரவை செயலாளர் ராஜா, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story