முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிப்பு

ஜெயலலிதா நினைவு நாள் 

முன்னாள் முதல்வர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

திண்டுக்கல் அருகே நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கே.பி.நல்லசாமி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது அவர் பேசியதாவது: இருந்தாலும் ஆயிரம் போல் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று பேசும் அளவுக்கு புகழும் செயலும் மிக்கவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரின் சிறிய பணிகள் செயல்கள் நம்மை எப்போதும் செம்மைப்படுத்தும். மக்களுக்காக மக்களால் நான் என்று சொன்னவர் ஜெயலலிதா. அவர் மறைந்தாலும், அவர் புகழ் என்றும் வாழும் கடலும் உள்ளளவும் உண்டு என்றார்.

Tags

Next Story