முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு அனுசரிப்பு

ராசிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை அனைத்து பகுதிகளிலும் அனுசரிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி ராசிபுரம் அதிமுக நகர கழகத்தின் சார்பில் நகர கழக செயலாளர் எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் அமைச்சர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ.சரோஜா, மற்றும் கழக முன்னோடிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர், நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர் என ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story