மறைந்த கட்சி தோழர் நினைவு தினம் அனுசரிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் வேலுச்சாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சி கிளை செயலாளராக செயல்பட்டு வந்தவர் தோழர் சி.வேலுச்சாமி. கடந்த 2010 ஆம் ஆண்டு கந்து வட்டி கும்பல் ஒன்று இளம்பெண் வாங்கிய கடனுக்கு அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்து அதை இணையதளத்தில் வெளியிட்டனர். இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக என்ற தோழர் வேலுச்சாமியை கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் ராஜவீதி என்ற பகுதியில் இரவு நேரத்தில் கொடூரமாக கொலை செய்தனர். தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்கில் ஈடுபட்டவர்கள் தற்போது தண்டனை பெற்று சிறையில் உள்ள நிலையில், தோழர் வேலுச்சாமி அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு ஒன்றியம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. பள்ளிபாளையம் ஆவரங்காடு கட்சி அலுவலகம் ,காவேரி ஆர் எஸ் தொழிற்சங்க அலுவலகம் ,மற்றும் அக்ரகாரம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட மூன்று இடங்களில் தோழர் வேலுச்சாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்விற்கு கட்சியின் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன், படைவீடு பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், விவசாய சங்கம் இ.கோவிந்தராஜ் ,கட்சி கிளை செயலாளர்கள் தோழர் வேலுச்சாமி அவர்களின் குடும்பத்தார் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்..

Tags

Next Story