மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ நினைவேந்தல் நிகழ்ச்சி

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ நினைவேந்தல் நிகழ்ச்சி

நினைவேந்தல் நிகழ்ச்சி 

புதுக்கோட்டையில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலரும் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான மறைந்த எஸ்.பி. முத்துக்குமரனின் 12-ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டைத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டசெயலர் எஸ்.பி.கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன், கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி அன்னவாசல் சாலையிலுள்ள சொக்கநாதன்பட்டி அருகே சாலை விபத்தில் காலமானார்.

அவரது 12-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சொக்கநாதன்பட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் ஒன்றியச் செயலர் ஏ.நாகராஜ் தலைமை வகித்தார்.

மாவட்டச் செயலர் த.செங்கோடன், மாவட்டத் துணைச் செயலர் கே.ஆர்.தர்மராஜன், மாவட்டப் பொருளாளர் என்.ஆர். ஜீவானந்தம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.சி. சோமையா, புதுக்கோட்டை நகரச் செயலர் எம்.பி. நாடிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகளும், மறைந்த முத்துக்குமரனின் மனைவி சுசீலா,

மகள் நர்மதா உள்ளிட்டோரும் மாலைவைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது பணிகளை மேற்கொள்ளவும் கட்சியினர் உறுதிமொழியேற்றனர்.

Tags

Next Story