ஒய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஒய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

நினைவு பரிசு வழங்கல் 

சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஒய்வு பெறும் 14 ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஜெயசீலி, பி.ஜெசிந்தா, அந்தோணிசாமி, மேகலை, கலைச்செல்வி, ஜேக்கப், பிரான்சிஸ்ராஜ், கார்த்திகேயன், ஏ.ஜெசிந்தா, அல்போன்ஸ், சூசைராஜ், செல்வராஜ், ஜெகதீசன், சாந்தகுமாரி ஆகிய 14 ஆசிரிர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. வாசவி மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாலு வரவேற்றார். மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், பொருளாளர் குமார், மாவட்ட செயலாளர் தண்டபாணி, தலைவர் அண்ணாமலை, பொருளாளர் ராஜாராம், பழனிவேல், அய்யாசாமி வாழ்த்திப் பேசினர். சிறப்பு விருந்தினர் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜன், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

Tags

Next Story