வாரச்சந்தை வளாகம், சமுதாய கழிப்பிடம் கட்டும் பணி துவக்கம்

வாரச்சந்தை வளாகம், சமுதாய கழிப்பிடம் கட்டும் பணி துவக்கம்

குமாரபாளையத்தில் மேற்கூரையுடன் கூடிய வாரச்சந்தை வளாகம், சமுதாய கழிப்பிடம் கட்டும் பணியை அமைச்சா் மதிவேந்தன் துவக்கி வைத்தார் 

குமாரபாளையத்தில் மேற்கூரையுடன் கூடிய வாரச்சந்தை வளாகம், சமுதாய கழிப்பிடம் கட்டும் பணியை அமைச்சா் மதிவேந்தன் துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட உள்ள புதிய மேற்கூரையுடன் கூடிய வாரச்சந்தை மற்றும் ராஜாஜி குப்பம் பகுதியில் 24.96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாய கழிப்பிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் பூமி பூஜை நடந்தது. நகராட்சி தலைவர், வடக்கு நகர தி.மு.க. செயலர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட கலெக்டர் உமா, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், தெற்கு நகர செயலர் ஞானசேகரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


Tags

Next Story