கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிகள் துவக்கம்

நந்திவரம் - கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிகளை எம்.பி.செல்வம், எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தனர்.
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்று தலைமை நீரேற்றும் நிலையத்தில்,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி கூட்டு குடிநீர் திட்ட புனரமைப்பு பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் காஞ்சி பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தனர். உடன் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் ,துணைத் தலைவர்,மறைமலைநகர் நகர மன்ற தலைவர், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர், மறைமலைநகர் நகராட்சி ஆணையர்,நீர்வளத்துறை உயர் அதிகாரிகள்,திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story