திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் குடிநீர் குழாய்களை பார்வையிட்டு ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக வாங்கப்பட்ட குடிநீர் குழாய்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 3-வது மண்டலத்திற்கு ட்பட்ட 56-வது வார்டு சந்திரா புரம் பகுதியில் நான்காம் குடிநீர் திட்டத்தின் கீழ் விடுபட்ட இடங்களில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக வாங்கப்பட்ட குடிநீர் குழாய்கள் மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்முறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் முனியாண்டி, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்...

Tags

Next Story