வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஆணையர் ஆய்வு

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஆணையர் ஆய்வு

குப்பை கிடங்கில் ஆணையர் ஆய்வு

நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஆணையர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளராக நிஷாந்த் கிருஷ்ணா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொறுப்பு ஏற்ற நிலையில், பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். நேற்று நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் வகையில் புத்தன் அணை குடிநீர் திட்டப்பணி சுத்திகரிப்பு நிலையத்தை ஆணையாளர் பார்வையிட்டார். இதுபோல புளியடி பகுதியில் உள்ள தகன மேடையை பார்வையிட்டார். மேலும் நாகர்கோவில் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரி விளை குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பைகள் பயோ மைனிங் முறையில் அகற்றப்பட்டு வருக்கிறது. இந்த பணிகளை ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின்போது உதவி பொறியாளர் சுஜன்,சுகாதார ஆய்வாளர் சத்யராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story