தேர்தல் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கிய கமிஷனர்

திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் வருகின்ற பாராளுமன்றத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கினார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமார் ஜி.கிரியப்பனவர் கடந்த தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்த பகுதியான 49-வது வார்டு, காங்கேயம் ரோடு, சத்தியமூர்த்தி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வருகிற பாராளுமன்ற (2024) தேர்தலில் அனைவரும் வாக்களித்து100 சதவீதம் வாக்கு பதிவிற்கான ஜனநாயக கடமையை ஆற்ற வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கினார்.

Tags

Next Story