முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்நலம் விசாரித்த கம்யூனிஸ்ட் தலைவர்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்நலம் விசாரித்த கம்யூனிஸ்ட் தலைவர்

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல்நலம் விசாரித்த கம்யூனிஸ்ட் தலைவர்

கள்ளகுறிச்சி மாவட்டத்தில் சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை இரா.முத்தரசன் சந்தித்து நலம் விசாரித்தாா்.பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது, கள்ளக்குறிச்சி முன்னாள் மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. ஆகியோா் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்த அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஏழை, எளிய தொழிலாளா்கள். சாராயம் விற்பவா்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனா்.

மெத்தனாலை விநியோகம் செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கள்ளச்சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களையும் கைது செய்ய வேண்டும் என்றாா் இரா.முத்தரசன்.தொடா்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரையும் சந்தித்து அவா் ஆறுதல் கூறினாா்.

Tags

Next Story