கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

எலச்சிபாளையத்தில், மிக்ஜம் புயலில் பாதிக்கபட்ட மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவிக்ககோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்.

எலச்சிபாளையத்தில், மிக்ஜம் புயலில் பாதிக்கபட்ட மாவட்டங்களை தேசிய பேரிடராக அறிவிக்ககோரி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்.
நேற்று நாடுமுழுவதும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வடமாவட்டங்களையும், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களையும் தேசிய பேரிடராக அறிவிக்ககோரியும், மாநில அரசு கோரியுள்ள 21ஆயிரத்து 692கோடி நிதியினை மத்திய அரசு முழுமையாக வழங்ககோரியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடந்தது. அதன் ஒருபகுதியாக, எலச்சிபாளையம் அஞ்சல்துறை அலுவலகம் அருகில் நடந்த ஆர்பாட்டத்திற்கு சி.பி.ஐ., ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட குழுஉறுப்பினர்கள் நல்லமுத்து, செங்கோட்டுவேலு முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அன்புமணி சிறப்புரையாற்றினார். ஒன்றிய குழுஉறுப்பினர்கள் வெங்கடேஷ், யுவராஜ், கார்த்தி, பழனிசாமி, ரவிக்குமார், தாமரைக்கண்ணன், சித்துராஜ், ஜெயராமன், நவக்கோடி, காயத்திரி, மாது உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story