இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சர்தார் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு முத்தையின், தங்கராஜ் முன்னிலை வகித்தார். செங்கம் வட்டத்தில் குப்பநத்தம் அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் 60 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதை அளவீடு செய்து தமிழ்நாடு அரசு வருவாய் துறை கணக்கில் முழுவதுமாக கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஏழுமலை, குப்புசாமி, மகாவிஷ்ணு, முருகன், பாலமுருகன், கோபி ஆகியோர் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.

Tags

Next Story