இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மனு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மனு

மனு அளித்த நகர செயலாளர்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மணிமாறன் ராசிபுரம் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மணிமாறன் அவர்கள் அவரது பெயருக்கும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் விதத்தில் மர்ம நபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, அவரது பெயரைப் பயன்படுத்தி நாமக்கல் மாவட்ட பொது தகவல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்( நிலம்) அவர்களிடம் கேள்விகள் கேட்டு இருந்ததை பொது தகவல் அலுவலர் மற்றும் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்களிடமிருந்து 11 - 1 - 2024 வியாழக்கிழமை அன்று அவரது வீட்டு முகவரிக்கு வந்திருந்த RTI - பதில் கடிதத்தின் வாயிலாக பார்த்து அறிந்து அதிர்ச்சியுற்றார்.

தனது பெயரை சட்ட விரோதமாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பயன்படுத்திய மர்ம நபரை உடனடியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராசிபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சுகவனம் அவர்களிடம் சி. பி. ஐ இராசிபுரம் ஒன்றியப் பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜா, சி. பி. ஐ நகரத் துணைச் செயலாளர், சாதிக், தி. வி.க நகரச் செயலாளர் பிடல்சேகுவேரா, ஆகியோருடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் மணிமாறன், புகார் மனுவினை வழங்கினார்.

Tags

Next Story