பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்டம்

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்டம்

ஒன்றிய குழு கூட்டம் 

பாபநாசத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்தில் நாளை மறுநாள் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் பொன் சேகர் தலைமையில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாரதி மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஏஐடி யுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் தில்லைவனம் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு தர்மராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினரும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான மாரிமுத்து தலைமையில் வருகிற 26 6 2024 புதன்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பாபநாசம் காவல்துறையை கண்டித்து அண்ணா சிலையிலிருந்து பேரணியாக புறப்பட்டு காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது எனவும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story