சமுதாய வளைகாப்பு - 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஆட்சியர் சீர்வரிசை

சமுதாய வளைகாப்பு  - 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஆட்சியர் சீர்வரிசை

சமுதாய வளைகாப்பு 

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கேற்றி சமுதாய வளைகாப்பு விழாவை துவக்கி வைத்தார். இந்த விழாவில் ஜோலார்பேட்டை வட்டாரம் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு 100 பேருக்கு தட்டு வரிசையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story