கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

காடையாம்பட்டி அருகே 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே தாசசமுத்திரம் ஸ்ரீ லட்சுமி நாராயணா திருக்கோவிலில் காடையாம்பட்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஷ்மிகா தலைமையில் சமுதாய வளைகாப்பு நேற்று நடைபெற்றது. இதில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்து ஆசீர்வதித்தனர். தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு அறுவை உணவு பரிமாறினர்.இந்த நிகழ்ச்சியில் காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் ரவி, மேற்பார்வையாளர்கள் ரூபா,ஆரோக்கியமேரி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Next Story