குடவாசல் அருகே சமுதாய வளைகாப்பு விழா

குடவாசல் அருகே சமுதாய வளைகாப்பு விழா

 குடவாசல் அருகே சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

குடவாசல் அருகே நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் எம்.எல்.ஏ., பங்கேற்றார்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் தனியார் அரங்கில் சமுதாய நலன், மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பிரபாகரன், திமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story