மேட்டூர் அருகே சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

மேட்டூர் அருகே சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

சமுதாய வளைகாப்பு 

மேட்டூர் அருகே கொளத்தூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம் தலைமையில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மேட்டூர் அருகே கொளத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், புடவை ஆகியவைகளை வழங்கப்பட்டது. பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 5 வகையான உணவு பரிமாறபட்டது நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story