ரூ.1.50 கோடி மதிப்பில் சமுதாய நலக் கூடம் - துவக்கி வைத்த அமைச்சர்

ரூ.1.50 கோடி மதிப்பில் சமுதாய நலக் கூடம் - துவக்கி வைத்த அமைச்சர்

அடிக்கல் நாட்டு விழா 

அடையாறு அருகே ரூ. 1.50 கோடியில் கட்டப்படவுள்ள சமுதாய நல கூட கட்டிடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அடையாறு மண்டலம், வார்டு-169, சின்னமலை, வெங்கடாபுரம் பகுதியில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள சமுதாய நலக் கூடத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் பிரியா, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மகேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story