போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு பிப்.9 ல் துவக்கம்

போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு பிப்.9 ல் துவக்கம்

 ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் பிப்.9 முதல் துவங்கப்பட உள்ளதாக ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது வெளியிட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காவலர், வனக்காப்பாளர், வரிதண்டலர் உள்ளிட்ட 6244 காலிப்பணியிடங்களை கொண்டுள்ள TNPSC தொகுதி-IV போட்டித்தேர்விற்கு நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் (09.02.2024) முதல் இவலச பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இப்போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும், இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story